டிக் டாக் செயலிக்கு 40 கோடி அபாராதம்.. குழந்தைகள் விவகாரம்.. அதிர வைக்கும் பின்னணி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 02, 2019

டிக் டாக் செயலிக்கு 40 கோடி அபாராதம்.. குழந்தைகள் விவகாரம்.. அதிர வைக்கும் பின்னணி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
சிறுவர்களின் தகவல்களை அனுமதி இல்லாமல் திரட்டியதால் டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவின் தலைமை வர்த்தக ஆணையம் ரூ.40 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக மாறிவிட் டிக்டாக் செயலிக்கு இளைஞர்கள் மற்றும் பெண்கள் அடிமையாக மாறிவிட்டனர்.
ஒரு பாடலையோ, இசையையோ அல்லது வசனத்தையே பின்னால் ஓடவிட்டு அதற்கு ஏற்றாற் போல் வாயை அசைப்பது மற்றும் நடிப்பது போன்றற்றை இச்செயலியில் மேற்கொள்ள முடியும். இதனை பார்த்து பலரும் லைக் போடுவதாலும், பிரபலம் ஆகலாம் என்பதாலும், இளசுகள் பலரும் அடிமையாகி வருகிறார்கள். இதனை பயன்படுத்தி பெண்களை ஆபாசமாக சித்தரித்து வீடியோக்களும் பரப்ப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அமைச்சர் மணிகண்டன் கூறியிருந்தார்.
இந்த நிலையில், டிக்டாக் செயலி குழந்தைகளின் தகவல்களை திரட்டி அமெரிக்காவில் சர்ச்சையில் சிக்கியுள்ளது. பெற்றோர்களின் அனுமதி இன்றி டிக்டாக் செயலி 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் தகவல்களை பெற்றோருக்கு தெரியாமல் திரட்டியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அமெரிக்காவின் தலைமை வர்த்தக ஆணையம் விதிகளை மீறி செயல்பட்டதாக டிக் டாக் செயலிக்கு சுமார் ரூ.40 கோடி அபராதம் விதித்துள்ளது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews