10ம் வகுப்புப் பொதுத்தேர்வு நிறைவு! ஆட்டம் பாட்டத்தோடு மாணவர்கள் கொண்டாட்டம்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 29, 2019

10ம் வகுப்புப் பொதுத்தேர்வு நிறைவு! ஆட்டம் பாட்டத்தோடு மாணவர்கள் கொண்டாட்டம்!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தமிழகம் மற்றும் புதுவையில் 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்றோடு நிறைவு பெற்றது. தேர்வு முடிந்த மாணவர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தோடு பள்ளியை விட்டு வெளியே சென்றனர். தமிழகம் மற்றும் புதுவையில் 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்றோடு நிறைவு பெற்றது. தேர்வு முடிந்த மாணவர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தோடு பள்ளியை விட்டு வெளியே சென்றனர். பள்ளிக்கல்வியில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு மிகமுக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த தேர்வு முடிவுக்குப் பின்னரே, மாணவர்கள் தொழிற்படிப்பு சேருவதா, அல்லது தொடர்ந்து பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பதா என்பது தீர்மாணிக்கப்படுகிறது. அதிலும், எந்த துறையில் அடுத்த படிப்பு என்பதும் தேர்வு செய்யப்படுகிறது.
இந்நிலையில், நடப்பு கல்வியாண்டின் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்றோடு நிறைவு பெற்றது. கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய இந்த தேர்வுகளில் முக்கிய பாடங்களான கணிதம், அறிவியல் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 5 மதிப்பெண், 2 மதிப்பெண் கேள்விகள் எதிர்பார்ப்புக்கு மாறாக கேட்கப்பட்டதால், இம்முறை செண்டம் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
பொதுத்தேர்வின் இறுதி நாளான இன்று, காலை முதலே மாணவர்கள் ஒருவித உற்சாகத்துடன் காணப்பட்டனர். தேர்வு முடிந்ததும், மாணவர்கள் ஆட்டம் பாட்டத்துடன் வெளியே வந்தனர். அதுவரை இருந்த மொத்த தேர்வு பயம், பொறுப்புகளும் பாரங்களும் இறங்கிய புத்துணர்ச்சியில் மாணவர்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். தற்போது தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், ஏப்ரல் இரண்டாம் வாரம் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து ஏற்கனவே திட்டமிட்டபடி, தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29ம் தேதி வெளியிடப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12,546 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 59 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வை எழுதினர். இதில் தனித்தேர்வர்கள் 38,176 ஆவர். மேலும், 4 திருநங்கைகளும் பொதுத்தேர்வை எழுதினர். மொத்தம் 3,731 தேர்வுமையங்கள் இதற்காக அமைக்கப்பட்டன. சென்னையில் மட்டும் மொத்தம் 213 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 50,678 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதினர். புதுச்சேரியில் 302 பள்ளியைச் சேர்ந்த 16,597 மாணவ, மாணவிகள் தேர்வை எழுதினர்.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews