மாணவன் அடித்துக் கொலை பள்ளி நிர்வாகிகள் கைது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 29, 2019

மாணவன் அடித்துக் கொலை பள்ளி நிர்வாகிகள் கைது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
உத்தரகண்ட் மாநிலத்தில், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட மாணவனின் உடலை, பள்ளி வளாகத்திலேயே, புதைத்தது தொடர்பாக, பள்ளி நிர்வாகிகள் உட்பட, ஐந்து பேர், கைது செய்யப்பட்டனர். உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் உள்ள ஹாப்பூர் பகுதியை சேர்ந்த, ௧௨ வயது சிறுவன், ரிஷிகேஷ் அருகே உள்ள உறைவிடப் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வந்தான்.இந்த பள்ளியை சேர்ந்த மாணவர்கள், சமீபத்தில் சுற்றுலா சென்றபோது, அந்த மாணவன், பிஸ்கட் திருடியதாக புகார் எழுந்தது. இதனால், &'மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வெளியே செல்லக்கூடாது&' என, அனைத்து மாணவர்களுக்கும், பள்ளி நிர்வாகிகள் தண்டனை கொடுத்தனர்.
ஆத்திரமடைந்த, &'சீனியர்&' மாணவர்கள், தங்களுக்கு தண்டனை கிடைக்க காரணமான, ஏழாம் வகுப்பு மாணவனை, கிரிக்கெட் மட்டையாலும், ஸ்டம்புகளாலும் தாக்கினர். இதில், படுகாயமடைந்த மாணவன், இறந்தான்.அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகிகள், அந்த மாணவனின் உடலை, பள்ளி வளாகத்திற்குள்ளேயே புதைத்தனர். இந்த விவகாரம் குறித்து, மாணவனின் பெற்றோருக்கும் தெரிவிக்கப்படவில்லை. உத்தரகண்ட் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் நடத்திய விசாரணையில், இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இந்த சம்பவத்தில் தொடர்புடைய பள்ளி மேலாளர், வார்டன், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இரண்டு மாணவர்கள் உள்ளிட்ட ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews