அரியர் தேர்வுகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த அண்ணா பல்கலைக் கழகம்.! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 26, 2019

அரியர் தேர்வுகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த அண்ணா பல்கலைக் கழகம்.!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
பொறியியல் படிக்கும் மாணவர்கள் அரியர் தேர்வுகளை அடுத்த செமஸ்டரில் எழுதிக் கொள்ள ஏதுவாக புதிய முடிவுகளை அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலையின் புதிய தேர்வு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், &'அரியர்&' தேர்வுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளுக்கு, 2018ல், அறிமுகம் செய்யப்பட்ட, புதிய தேர்வு விதிமுறைகளுக்கு, மாணவர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, தேர்வு விதிகளை மாற்றி, அண்ணா பல்கலையின், சிண்டிகேட் ஒப்புதல் அளித்துள்ளது. புதிய விதிகள், அனைத்து கல்லுாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
புதிய விதிப்படி, இன்ஜி., மாணவர்கள், நான்காம் செமஸ்டர் வரை, அரியர் பாடங்கள் இருந்தால், அவற்றை, அடுத்தடுத்த தேர்வுகளில் சேர்த்து எழுதலாம். ஆனால், ஐந்தாவது செமஸ்டர் வரும் போது, முதல் செமஸ்டரில், கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால், முதல் செமஸ்டருக்கான வகுப்பில் பங்கேற்று, அந்த பாடங்களை முடிக்க வேண்டும்.ஆறாம் செமஸ்டர் வரும் போது, இரண்டாம் செமஸ்டரிலும், ஏழாம் செமஸ்டர் வரும் போது, மூன்றாம் செமஸ்டரிலும், எட்டாம் செமஸ்டர் வரும் போது, நான்காவது செமஸ்டரிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பின்பற்றப்பட்டு வந்த பழைய நடைமுறையின்படி, முதல் பருவத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், அடுத்து வரும் இரண்டாம் பருவத் தேர்வில் எழுதிக் கொள்ள முடியும். இதனிடையே, இந்த பழைய நடைமுறைக்குப் பதிலாக புதிய திட்டத்தினை அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்த பொழுது மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், பல்கலைக்கழக நிர்வாகக் குழு புதிய திட்டத்தில் திருத்தம் செய்து தற்போது புதிய நடைமுறையை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் முதல் பருவத் தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தால், அதனை அடுத்து வரும் இரண்டாவது தேர்வில் எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதல் பருவத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் வெற்றி பெறாமல், 5-ஆவது செமஸ்டரை எழுத முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வியாண்டின் இறுதிக் கட்ட தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள், அதனை அடுத்தடுத்து வரும் 3 செமஸ்டர்களில் எழுதிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரியர் முறையைப் போன்றே, தேர்வு விடைத்தாளை மதிப்பீடு செய்யும் முறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள், பல்கலைக்கழக நிர்வாகக் குழு ஒப்புதலுக்குப்பின் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews