👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 8807414648
காஷ்மீர் மாநிலத்தில், கடுமையான பனிப் பொழிவு நிலவுவதால், இந்திய விமானப் படை ஏற்பாடு செய்த தனி விமானத்தில், 319 மாணவர்கள், ஸ்ரீநகரிலிருந்து ஜம்முவுக்கு அழைத்து வரப்பட்டு, இன்ஜினியரிங் தேர்வு எழுதினர்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், ஜனாதிபதி ஆட்சி நடக்கிறது.
இந்த மாநிலத்தில், சமீபகாலமாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. தரையிலும், சாலைகளிலும், பல அடி உயரத்திற்கு பனி உறைந்திருப்பதால், சாலை போக்குவரத்து முடங்கியுள்ளது. உறை பனி காரணமாக, ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, இந்திய விமானப் படை சார்பில், வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில், ஜம்மு - ஸ்ரீநகர் இடையே தனி விமானம் இயக்கப்பட்டது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்