Breaking

Wednesday, February 13, 2019

பாரத ரத்னா, பத்ம விருதுகளை பட்டமாக பயன்படுத்தக்கூடாது: மத்திய அரசு எச்சரிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 8807414648
பாரத ரத்னா, பத்ம விருதுகளை தவறாக பயன்படுத்தினால் விருது திரும்ப பெறப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அகிர் எழுத்து மூலமாக அளித்த பதிலில் கூறியதாவது: பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்மபூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றவர்கள் சட்டப்பிரிவு 18(1)ன்படி அதனை தனது பெயருக்கு முன்போ அல்லது பின்போ எந்த காரணத்துக்காகவும் பட்டமாக பயன்படுத்தக்கூடாது.
விருதுகளை யாராவது தவறாக பயன்படுத்தினால் ஜனாதிபதி மூலமாக விருது ரத்து செய்யப்படும். விருது பெற்றோர் பதிவேட்டில் இருந்து சம்பந்தபட்ட நபரின் பெயர் அகற்றப்பட்டுவிடும். சம்பந்தப்பட்ட நபர் தனது விருதை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை 1955ம் ஆண்டில் இருந்து இதுவரை 38 பேர் பெற்றுள்ளனர். 307 பேருக்கு பத்ம விபூஷன், 1255 பேருக்கு பத்ம பூசன் மற்றும் 3005 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews

Search This Blog