👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 8807414648
5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்பதற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி பேசியது:
5 மற்றும் 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படப் போவதாகச் செய்திகள் வருகின்றன. இந்த முறையை அமல்படுத்தினால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர்.
இடைநிற்றல் அதிகரிக்கும். அதனால், 5 மற்றும் 8 -ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு முறையை அமல்படுத்தக்கூடாது என்றார்.
அதற்கு அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பதில்:
5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என்பது மத்திய அரசின் முடிவு.
இதனைச் செயல்படுத்துவது குறித்து மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்தத் தேர்வை இதுவரை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்