பிளஸ் 2 தேர்வில் காப்பி அடிக்க உதவிய அதிகாரிகள் கைது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 26, 2019

பிளஸ் 2 தேர்வில் காப்பி அடிக்க உதவிய அதிகாரிகள் கைது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
உத்தர பிரதேசத்தில், பிளஸ் 2 தேர்வில், மாணவர்கள், &'காப்பி&' அடிக்க உதவிய, தேர்வு மைய அதிகாரி மற்றும் 14 கண்காணிப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர்.உ.பி.,யில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு நடக்கிறது. நேற்று முன்தினம், இயற்பியல் தேர்வு நடந்தது.முசாபர் நகர் மாவட்டத்தில், ஒரு தேர்வு மையத்தில், அதிரடிப் படையினர் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது, மாணவர்கள் பலர், மிகவும் சுதந்திரமாக காப்பியடிப்பதை கண்டுபிடித்தனர். இவர்களுக்கு, தேர்வு மைய அதிகாரி மற்றும் கண்காணிப்பாளர்களாக இருந்த, 14 பேரும் உதவி செய்தது தெரிய வந்தது.இதையடுத்து, தேர்வு மைய அதிகாரி, கண்காணிப்பாளர்கள் உட்பட, 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாணவர்களிடமிருந்து, விடைத்தாள், இயற்பியல் புத்தகம் ஆகியவற்றையும் கைப்பற்றினர். அத்துடன் சில மாணவர்களிடமிருந்து, துப்பாக்கி, மொபைல் போன்களும் கைப்பற்றப்பட்டன.இது பற்றி, கலெக்டர், அஜய் சங்கர் பாண்டேவிடம், அதிரடிப் படையினர் புகார் செய்தனர்.கலெக்டர் பாண்டே நேற்று கூறுகையில், &'&'கைது செய்யப்பட்ட, 17 பேரும், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த மையத்தில் இருந்த அனைத்து ஊழியர்களும், மாற்றப்பட்டு விட்டனர்,&'&' என்றார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews