பிளஸ் 2 தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் தேர்வுப்பணி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 27, 2019

பிளஸ் 2 தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் தேர்வுப்பணி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் பொதுத்தேர்வு மையத்திற்கான கண்காணிப்பாளர் தேர்வு செய்யும் பணியை, பள்ளிக்கல்வி இணை இயக்குனர் ஆய்வு செய்தார். தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் 1ம் தேதி முதல் துவங்குகிறது. தேர்வையொட்டி, பள்ளிக்கல்வித் துறை சார்பில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து கல்வி மாவட்டங்களிலும், தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் நியமிக்க குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.இந்த பணிகள் விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளியில் நேற்று நடந்தது. இப்பணியை பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் அருள்முருகன் ஆய்வு செய்தார். பின்னர், தேர்வான ஆசிரியர்களுக்கு கண்காணிப்பு பணிகள் தொடர்பாக ஆலோசனை வழங்கினார். இதையடுத்து, மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பொதுத்தேர்வு வினாத்தாள் அறையை, பார்வையிட்டு, பாதுகாப்பு பணி குறித்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.ஆய்வின் போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்டக் கல்வி அலுவலர் ஆனந்தன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சரவணன், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் உடனிருந்தனர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews