வாஜ்பாய் பெயரில் பள்ளிகளில் ஆய்வகங்கள் அமைக்க அழைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 27, 2019

வாஜ்பாய் பெயரில் பள்ளிகளில் ஆய்வகங்கள் அமைக்க அழைப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மதுரையில் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் மத்திய அரசு சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரில் அமையவுள்ள நவீன அறிவியல் ஆய்வகங்களுக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
மத்திய அரசின் நிதி அயோக் அடல் இன்னோவேஷன் மிஸன் திட்டத்தின் கீழ் அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் ஏற்படுத்துவது குறித்து கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக ஐந்தாண்டுகளுக்கான பராமரிப்பு, உபகரணங்கள், புரொஜெக்டர் உட்பட ஒரு பள்ளிக்கு தலா 20 லட்சம் வரை நிதி ஒதுக்கப்படுகிறது. ஆய்வகம் தேவையுள்ள பள்ளியில் 1500 ச.அ., நிலம் இருந்தால் போதும். இதற்கு niti.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.இதற்கு தலைமையாசிரியர்களிடையே அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் பள்ளிகள் இத்திட்டத்தில் பயன்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:முதலில் மாவட்டத்திற்கு 50 பள்ளிகளுக்கு மட்டுமே ஆய்வகங்கள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது 1500 ச.அ., இடவசதி உள்ள விரும்பும் பள்ளிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான வழி முறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் கேட்கப்படும் பள்ளிகள் விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்க பிப்.,28 கடைசி நாள். மேலும் விபரங்களுக்கு 96299 76395ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews