தேர்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் மாவட்டத்தை முதலிடத்திற்கு கொண்டு வருவது குறித்து முதன்மைக்கல்வி அலுவலர் ஆசிரியர்களுக்கு அறிவுரை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 16, 2018

தேர்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் மாவட்டத்தை முதலிடத்திற்கு கொண்டு வருவது குறித்து முதன்மைக்கல்வி அலுவலர் ஆசிரியர்களுக்கு அறிவுரை

உடுமலை கல்வி மாவட்டத்துக்குட்பட்ட முதுநிலை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. உடுமலை எஸ்.கே.பி.,மேல்நிலைப்பள்ளியில் நடந்த, கூட்டத்துக்கு, கல்வி மாவட்ட அலுவலர் மணிவண்ணன், எஸ்.கே.பி., பள்ளி தலைமையாசிரியர் பூரணி முன்னிலை வகித்தனர்
உடுமலை கல்வி மாவட்டத்திலுள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளின், முதுநிலை ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாந்தி தலைமை வகித்தார் பொதுத்தேர்வுக்கு மாணவர்களை எவ்வாறு தயார்படுத்த வேண்டும், நுாறு சதவீத தேர்ச்சி இலக்கை எட்டுதல், மற்றும் கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு தேர்வை எளிமையாக்குவது குறித்து முதன்மைக்கல்வி அலுவலர் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்
தொடர்ந்து, பள்ளிகளின் கடந்தாண்டு தேர்ச்சி சதவீதம் மற்றும் நடப்பாண்டில் தற்போதைய நிலை குறித்தும், தேர்வு தொடர்பான சந்தேகங்களை அறிந்துகொள்ளவும் ஒவ்வொரு பள்ளி ஆசிரியராக கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடந்தது தேர்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டத்தை முதலிடத்தை கொண்டு வர வேண்டும். நடக்க உள்ள பொதுத்தேர்வில், அதிக தேர்ச்சியை விடவும், நூறு சதவீத தேர்ச்சி மட்டுமே இலக்காக இருக்க வேண்டும் எனவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது பிளஸ் 1 வகுப்பு செயல்முறை தேர்வுகள் குறித்து, ஆசிரியர்களுக்கு விரைவில் ஆலோசனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews