கல்வித்துறை அனுமதி பெறாமல், புத்தகம் வெளியிட்ட ஓவிய ஆசிரியரிடம் விளக்கம் பெற்று சமர்ப்பிக்க, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்
எஸ்.எஸ்.குளம் ஒன்றியம், வதம்பசேரி, எஸ்.சி.எம்., அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில், ஓவிய ஆசிரியராக பணியாற்றுபவர் ஈஸ்வரன்
இவர், கல்வித்துறை அனுமதியின்றி, 'துாரிகைக்குறள்' என்ற ஓவிய புத்தகம் அச்சிட்டு விற்றதாக, புகார் எழுந்தது.இவருக்கு, நடப்பாண்டில், மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது
இதற்கு எதிராக, தமிழ்நாடு கலையாசிரியர் நலச்சங்க தலைவர் ராஜ்குமார், கலெக்டர் அலுவலகத்தில், புகார் அளித்தார்.இதையடுத்து, ஈஸ்வரனிடம் ஒரு வார காலத்துக்குள், விளக்கம் பெற்று அனுப்புமாறு, பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், கோவை முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார். கணினிக்கல்வி
ஓவிய ஆசிரியர் ஈஸ்வரனிடம் கேட்டபோது,''எனது துாரிகைக்குறள் புத்தகம், குறித்த விளக்கத்தை, கல்வி துறையிடம் அளித்துள்ளேன்,'' என்றார்.எஸ்.எஸ்.குளம் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) கீதாவிடம் கேட்டபோது,''ஓவிய ஆசிரியர் ஈஸ்வரன் புத்தகம் வெளியிட, துறையில் முன் அனுமதி பெறவில்லை. இவரிடம் விளக்கம் பெற்று, முதன்மை கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது,'' என்றார்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்