மாணவர்கள் ஆராய்ச்சி ஈடுபாட்டுக்கு பயிற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 11, 2018

மாணவர்கள் ஆராய்ச்சி ஈடுபாட்டுக்கு பயிற்சி

மாணவர்கள் ஆராய்ச்சி ஈடுபாட்டுக்கு பயிற்சி பள்ளி மாணவர்களிடம் ஆய்வு ஈடுபாட்டை அதிகரிக்கும், 'இம்பார்ட்' திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு நவம்பர் 9 அன்று பயிற்சி அளிக்கப்பட்டது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் மாணவர்களிடம், ஆய்வு செய்யும் ஆர்வத்தை அதிகரிக்கும் 'இம்பார்ட்' திட்டம், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
இத்திட்ட செயல்பாடு குறித்தும், மாணவர்களை வழிநடத்துவது குறித்தும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் உட்பட, 255 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது மணி மேல்நிலைப் பள்ளியில் நடந்த பயிற்சி முகாமில், எஸ்.எஸ்.குளம் மாவட்ட கல்வி அலுவலர் கீதா, பொள்ளாச்சி கல்வி அலுவலர் வெள்ளிங்கிரி, எஸ்.எஸ்.ஏ., உதவி மாவட்ட அலுவலர் பெல்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்
மாவட்ட திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் கூறுகையில்,''கோவை வருவாய் மாவட்டத்தில், 100 அரசுப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, தலா ஐந்து 'புராஜெக்ட்'கள் வழங்கப்பட்டுள்ளன பாடரீதியாக ஆசிரியர்கள் மாணவர்களை வழிநடத்தவுள்ளனர். அதற்கு தயாராகும் விதமாக, அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது,'' என்றார்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews