சென்னை எழும்பூரில் ஜோத்பூர் விரைவு ரயிலில் வந்தது நாய்க்கறி அல்ல, ஆட்டுக்கறிதான் என்று சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரியில் நடந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
ஜோத்பூரில் இருந்து ரயிலில் கொண்டு வரப்பட்ட 2,100 கிலோ கெட்டுப்போன இறைச்சி, சிறிய ஆடு அல்லது செம்மறியாட்டு வகையை சேர்ந்தது எனவும் தெரியவந்துள்ளது.