அந்த பள்ளிக்கூடத்தை தன் சொந்த செலவில் சீரமைத்தவர், அதுபோல் பழுதடைந்த நிலையில் இருக்கும் பள்ளிகளை சீரமைக்க நிதி திரட்டி வருகிறார். இவருடைய முயற்சியால் பல பள்ளிக்கூடங்கள் தனியார் பள்ளிக்கூடங்களை போன்று அழகிய கட்டமைப்புகளுடன் மிளிர்ந்து கொண்டிருக்கின்றன.
‘‘நான் ஆய்வுக்கு சென்ற பள்ளிக்கூடம் சீர்குலைந்த நிலையில் இருந்தது. அங்கு மாணவர்களின் நிலையை பார்க்க பரிதாபமாக இருந்தது. அவர்களை என் சொந்த குழந்தை போல உணர்ந்தேன். முதலில் மேற்கூரையை பழுது பார்க்க முடிவு செய்தேன். பிறகு முழு கட்டிடத்தையும் என் சொந்த செலவில் புதுப்பித்தேன். வெறுமனே புனரமைப்பு பணி மேற்கொள்வதில் எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்தேன். அதன் மூலம் மாணவர்களின் கல்வித்தரமும் மேம்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
அதற்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதே சரியான தீர்வாக இருக்கும் என்ற எண்ணத்தில் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டேன். பள்ளியை முழுமையாக சீரமைத்து தேவையான பொருட்களையும் வாங்கிக்கொடுத்தேன். அதனால் நானே ஆச்சரியப்படும் வகையில் அந்த பள்ளிக்கூடம் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காட்சியளித்தது.
அதை பார்த்ததும் மற்ற பள்ளிக்கூடங்களையும் அதுபோல் ஏன் மாற்றியமைக்கக்கூடாது என்ற எண்ணம் உண்டானது. இதுபற்றி ஆசிரியர்களிடம் ஆலோசித்தேன். அவர்களும் அதற்கு சம்மதித்தார்கள். பள்ளிக்கூடத்தில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு நிதி திரட்டி கொடுத்தார்கள். முதல்கட்டமாக இரண்டரை லட்சம் ரூபாய் திரட்டினோம்.
அதனால் அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அல்மோரா மாவட்டத்தில் 57 பள்ளிகளில் குறுகிய காலத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
கீதிஜா ஜோஷியின் முயற்சியால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here