ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளின் கட்டணம் உயர்வு - ஆசிரியர்தேர்வு வாரியம் அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டணம், எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினருக்கு 250 ரூபாயாகவும், மற்ற பிரிவினருக்கு500 ரூபாயாகவும் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சட்டகல்லுாரிகளில் உதவி பேராசிரியர் போட்டி தேர்வு அறிவிப்பில் கட்டணம்உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினருக்கான கட்டணம் 250 ரூபாயில இருந்து, 300 ரூபாயாகவும், மற்றவர்களுக்கு 500 ரூபாயில் இருந்து, 600 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆன்லைன் வழி பதிவு உள்ளிட்ட பணிகள் நடைபெறும் நிலையில், தேர்வுகட்டணங்களை குறைக்குமாறு வலியுறுத்தும் நிலையில், கட்டண உயர்வால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.