இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்போருக்காக, கல்லுாரிகளில் காலியாக உள்ள இடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கைக்கு, ஒற்றை சாளர முறை மற்றும் 'ஆன்லைன்' கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக, விளையாட்டு பிரிவு மாணவர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் மற்றும் மாற்று திறனாளி மாணவர்களுக்கு, ஜூலை, 6 முதல், 8 வரையில், கவுன்சிலிங் நடத்தப்பட்டு, இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்களுக்கு, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், வரும், 16, 17ம் தேதிகளில் நடத்தப்படுகிறது.இந்நிலையில், இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ள விளையாட்டு பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கான இட ஒதுக்கீட்டில், எந்தெந்த கல்லுாரிகளில், காலியிடங்கள் உள்ளன என்ற பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மாணவர் சேர்க்கை கமிட்டியின், https://tnea.ac.in/ என்ற இணையதளத்தில், இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டு பிரிவினருக்கு, 76 கல்லுாரிகளில், தலா ஒரு இடம் என, பாடப்பிரிவு மற்றும் இன ரீதியான ஒதுக்கீடு வாரியாக, விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதேபோல், விளையாட்டு பிரிவில், தலா ஒரு பாடப்பிரிவில் காலியிடம் உள்ள, 235 கல்லுாரிகளின் பெயர்களும், இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.