உள்ளாட்சிகளிடம் அனுமதி பெற்று, கட்டடம் கட்டியுள்ள பள்ளிகள், நகர்ப்புற வளர்ச்சித்துறை அனுமதியை பெற, மெட்ரிக் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அனைத்து மாவட்டங்களிலும், 2011, ஜன.,1க்கு முன், உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்று, கட்டடம் கட்டியுள்ள பள்ளிகளின் பட்டியலை, உடனே சேகரிக்க வேண்டும்.
அந்த பள்ளிகளின் தாளாளர்களை அழைத்து, நகர் மற்றும் ஊரமைப்பு துறை துணை, உதவி இயக்குனர்கள் முன்னிலையில், 28ம் தேதி கூட்டம் நடத்த வேண்டும்.கூட்டத்தில், வழிகாட்டுதல் பெற்று, சம்பந்தப்பட்ட பள்ளிகள், நகர் மற்றும் ஊரமைப்பு துறையின் அனுமதியை பெற, மூன்று மாதங்களுக்குள், 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பள்ளிகளின் பட்டியலை, அறிக்கையாக இயக்குனரகத்துக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.