Breaking

Tuesday, April 07, 2026

ஓட்டுச்சாவடியில் பணியாற்றும் அலுவலர் இரண்டாம் கட்ட தேர்வு ஆய்வு கூட்டம்



ஓட்டுச்சாவடியில் பணியாற்றும் அலுவலர் இரண்டாம் கட்ட தேர்வு ஆய்வு கூட்டம்

ஒட்டுச்சாவடியில் பணியாற்ற வுள்ள அலுவலர்கள், கணினி சுழற்சி முறையில், இரண்டாம் கட்டமாக தேர்வு செய்யும் பணி குறித்து ஆய்வு கூட்டம், நேற்று நடந்தது.

நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய, ஆறு சட்டசபை தொகுதிகளுக்குக்கான தேர்தல், வரும், 23ல் நடக்கிறது. இந்திய தேர்தல் ஆணை யத்தின் அறிவிப்புபடி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், சேந்தமங்கலம், அதையொட்டி, ஆறு சட்டசபை தொகுதிகளில், 1,780 ஓட்டுச்சாவ டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஓட் டுச்சாவடி மையங்களில் தேர்தல் நாளான, வரும், 23ல், பணியாற்ற ஒவ்வொரு ஓட்டுச்சாவடிகளிலும், தலா, ஒரு முதன்மை அலுவலர், மூன்று நிலைகளிலான ஓட்டுச்சா வடி அலுவலர்கள் என மொத்தம், 8,544 அலுவலர்களுக்கு, கடந்த, 23ல், கணினி மூலம் முதற்கட் டமாக சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 85 வயதிற்கு மேற்பட் டவர்கள், மாற்றுத்திறனாளிகளில், 40 சதவீதம் அதற்கு மேற்பட்ட வர்கள், வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு மூலம் ஓட்டுபோடும் வசதியை வழங்கி உள்ளது. அதன் படி, ஓட்டுச்சாவடி நிலை அலு வலர்கள் மூலம், மேற்படி வாக் காளர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று படிவம், '12டி' வழங்கப் பட்டுள்ளது. மேலும், பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய உள்ள, 174 நுண்பார்வையாளர்க ளுக்கு, முதற்கட்டமாக கணினி மூலம் சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஓட்டுச்சாவ டியில் பணியாற்றவுள்ள அலுவ லர்கள் கணினி சுழற்சி முறையில், இரண்டாம் கட்டமாக தேர்வு செய்யும் பணி, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம், தபால் ஒட்டு, தேர்தல் நுண்பார்வையாளர்கள் பயிற்சி, தபால் ஓட்டு பதிவிற் கான பயிற்சி, வாக்காளர் சீட்டு ஆகிய பொருள் குறித்து தொடர்பு டைய பொறுப்பு அலுவலர்களுக் கான ஆய்வுக்கூட்டம், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கலெக்டருமான தலைமையில், முன்னதாக, மாவட்ட தேர்தல் அலுவலரும், துர்காமூர்த்தி தேர்தல் பொதுப்பார்வையாளர் களான மனோஜ் புஷப், சஞ்சய் லாலாசாஹிப் யாதவ் ஆகியோர், கலெக்டர் அலுவலகத்தில் அமைக் கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப் பாட்டு அறை, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையம் ஆகியவற்றின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.

டி.ஆர்.ஓ.,க்கள் சரவணன், கண்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சந்தியா, சுஜாதா, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog