Breaking

Saturday, December 17, 2022

தமிழகத்தில் பள்ளிசெல்லா குழந்தைகளின் விவரங்கள் சேகரிக்க உத்தரவு

தமிழகத்தில் பள்ளி செல்லா குழந்தைகளின் விவரங்களை சேரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 100 சதவீதம் உறுதி செய்யும் வகையில் ஆண்டுதோறும் பள்ளிகளில் இருந்து இடைநிற்கும் மாணவர்களின் விவரங்களை சேகரித்து அந்த மாணவர்களை மீண்டும் பள்ளிகள் அல்லது சிறப்பு வகுப்பில் சேர்க்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், நடப்பாண்டில் பள்ளி செல்லாத குழந்தைகள் அல்லது இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும்.

அதன்படி, குழந்தைகளின் வீட்டிற்கே நேரடியாக சென்று அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க களப்பணி ஆற்ற வேண்டும். வரும் 19ம் தேதி முதல் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மூலமாக குழுக்கள் அமைத்து ஜன.11ம் தேதி வரை இந்த பணிகளை மேற்கொள்ள மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், முன்னறிவிப்பின்றி தொடர்ந்து ஒரு மாதம் வரை பள்ளிக்கு வராத குழந்தைகள், அதிகமாக விடுமுறை எடுத்து பள்ளியிலிருந்து இடைநின்ற குழந்தைகள் ஆகியோர் பள்ளி செல்லாக் குழந்தைகளாக கருதப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog