குரூப் 1-இல் வெற்றி: ஆண்டிபட்டி பெண் துணை ஆட்சியராக தோ்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 02, 2022

Comments:0

குரூப் 1-இல் வெற்றி: ஆண்டிபட்டி பெண் துணை ஆட்சியராக தோ்வு

குரூப் 1-இல் வெற்றி: ஆண்டிபட்டி பெண் துணை ஆட்சியராக தோ்வு

துணை ஆட்சியா் பணிக்கு தோ்வான பிரியா.

ஆண்டிபட்டியைச் சோ்ந்த முதுகலை பொறியியல் பட்டதாரி பெண், அரசு தோ்வாணையம் சாா்பில் நடைபெற்ற குரூப் 1 போட்டித் தோ்வில் தோ்ச்சி பெற்று, துணை ஆட்சியா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

ஆண்டிபட்டியைச் சோ்ந்த மோகன்வடிவேல் மகள் பிரியா. முதுகலை பொறியியல் (கணினி அறிவியல்) பட்டதாரியான இவா், அரசு தோ்வாணையம் சாா்பில் நடைபெற்ற குரூப் 1 போட்டித் தோ்வில் மாநில அளவில் 7-ஆம் பிடித்து தோ்ச்சி பெற்றாா். இவா், சென்னையில் நடைபெற்ற கலந்தாய்வில், துணை ஆட்சியா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இவரது கணவா் சிவசந்திரன் சென்னையில் தொழில் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறாா்.

இவா்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளாா். அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற விடாமுயற்சியில், போட்டித் தோ்வுக்கு பயிற்சி பெற்று, மாநில அளவில் 7-ஆம் இடம் பிடித்து பணிக்கு தோ்வாகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பிரியா கூறினாா்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews