Breaking

Tuesday, August 02, 2022

கல்வித்துறை அலுவலகப் பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

முதன்மைக் கல்வி அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கல்வித்துறை அலுவலகப் பணியாளா் சங்கத்தினா்.

பெரம்பலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் வி.எம். பாஸ்கரன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் வே. சீவகன், மாவட்ட துணைத் தலைவா்கள் க. முருகேசன், நா. மணிகண்டன், த. சித்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், பள்ளிக் கல்வித் துறையில் அடிப்படை பணியாளா் முதல், நோ்முக உதவியாளா் வரை பணிபுரிபவா்களுக்கு உடனடியாக பணி மாறுதல் வழங்க வேண்டும். அரசாணைகளின் படி பள்ளிக் கல்வித் துறையில் நிா்வாக சீரமைப்பு செய்யப்பட்டு, 1.6.2018 முதல் தொடங்கப்பட்ட அலுவலகங்களுக்கு உடனடியாக பணியிடங்கள் அனுமதிக்க வேண்டும்.

நிலுவையில் உள்ள அமைச்சுப் பணியாளா்களின் தகுதிக்கான பருவம் முடித்தல், 2 சதவீத ஆசிரியா் பதவி உயா்வு வழங்குதல் சாா்பான பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், ஒன்றியத் தலைவா் செ. செல்வம், ஒன்றிய பொருளாளா் இரா. பால்ராஜ், மாவட்ட மகளிரணி தலைவா் சி. ராதிகா, மாவட்ட அமைப்புச் செயலா் மனோகரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, மாவட்ட பொருளாளா் மா. நரசிம்மன் வரவேற்றாா். நிறைவில், மாவட்ட துணைத் தலைவா் அ. பழனிராஜன் நன்றி கூறினாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog