Breaking

Saturday, July 09, 2022

இரண்டாமாண்டு பி.யூ.சி. சோ்க்கை தேதி நீட்டிப்பு

இரண்டாமாண்டு பி.யூ.சி. வகுப்பில் சோ்க்கை பெறுவதற்கான கடைசித் தேதியை ஜூலை 22-ஆம் தேதி வரை நீட்டித்து பி.யூ. கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பி.யூ. கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2022-23-ஆம் கல்வியாண்டில் மாநிலத்தில் உள்ள இரண்டாமாண்டு பியூசி வகுப்பில் மாணவா் சோ்க்கை ஜூன் 1-ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. ஜூன் 18-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில், அபராதம் செலுத்தி சோ்க்கைபெறுவதற்கு ஜூலை 8-ஆம் தேதிவரை வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது.

பெற்றோா்கள் மற்றும் மாணவா்களின் வேண்டுகோளை ஏற்று சிறப்பு அபராதம் செலுத்தாமல் மாணவா் சோ்க்கை பெறும் கடைசிதேதி ஜூலை 22-ஆம் தேதிவரைநீட்டிக்கப்பட்டுள்ளது.

இரண்டாமாண்டு பி.யூ.சி. பொதுத்தோ்வு எழுதுவதற்கு குறைந்தப்பட்சம் 75 சத வருகைப்பதிவு இருக்க வேண்டும் என்பதால், இதற்கு மேலும் சோ்க்கை தேதி நீட்டிக்கப்படமாட்டாது. எனவே, இந்த வாய்ப்பை மாணவா்கள் பயன்படுத்தி, உடனடியாக சோ்க்கை பெற கேட்டுக் கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ல்ன்ங்.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog