குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000: பயனாளிகளில் 34 லட்சம் பேர் தேர்வு? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 07, 2022

Comments:0

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000: பயனாளிகளில் 34 லட்சம் பேர் தேர்வு?

தமிழக அரசு, குடும்ப தலைவிக்கு மாதம், 1,000 ரூபாய் உரிம தொகை வழங்க 34 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு ஊழியர்கள், வசதி படைத்தவர்கள், சொந்த வீடு வைத்திருப்போர் என, 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். எனவே மாதம், 1,000 ரூபாய் உரிம தொகை, அனைத்து அரிசி கார்டுதாரர்களும் வழங்க முடியாது.

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு, 'ஆதார்' எண் அடிப்படையில், ஒவ்வொரு குடும்பத்திலும் முதியோர் உதவி தொகை, விவசாய நிதியுதவி என, மத்திய, மாநில அரசு திட்டங்களை பெறும் பயனாளிகள்;

ஏழ்மையில் உள்ளவர்கள் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

மத்திய அரசு, இலவச சமையல் காஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், பல்வேறு ஆய்வுக்கு பயனாளிகளை தேர்வு செய்கிறது. சிலிண்டர் மானியம் வழங்குவதற்காக, அந்த பயனாளிகளின் வங்கி கணக்கு விபரங்கள், எண்ணெய் நிறுவனங்களிடம் ஏற்கனவே உள்ளன.

தமிழகத்தில், 34.51 லட்சம் இலவச சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ளனர். எனவே, குடும்ப தலைவிக்கு மாதம், 1,000 உரிம தொகை வழங்கும் திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வில் முதல் கட்டமாக, இலவச காஸ் இணைப்பு பெற்றுள்ளவர்களை சேர்க்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

மொத்த பயனாளிகளும் அடையாளம் காணப்பட்ட பின், உரிம தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews