அரசு தொடக்கப் பள்ளியில் புத்தகம், சீருடை தீயில் நாசம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 11, 2022

Comments:0

அரசு தொடக்கப் பள்ளியில் புத்தகம், சீருடை தீயில் நாசம்

மணல்மேல்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த சீருடைகள், புத்தகங்கள் தீயில் எரிந்து நாசமாகின.

புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.மாணவ - மாணவியருக்கு வழங்குவதற்கான சீருடைகள், புத்தகங்கள் பள்ளி வளாகத்தில் உள்ள கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்தன.

நேற்று பகல், 2:00 மணிக்கு சீருடைகள், புத்தகங்கள் இருந்த கட்டடத்தில் தீ பற்றியதில், அதில் வைத்திருந்த அனைத்தும் எரிந்து நாசமாகி விட்டன.மணல்மேல்குடி தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். மணல்மேல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.10.7.22: புதுக்கோட்டை: மீனாட்சிசுந்தரம்: 9842653439 (படம் உண்டு)

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews