Breaking

Monday, July 11, 2022

அரசு தொடக்கப் பள்ளியில் புத்தகம், சீருடை தீயில் நாசம்

மணல்மேல்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த சீருடைகள், புத்தகங்கள் தீயில் எரிந்து நாசமாகின.

புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.மாணவ - மாணவியருக்கு வழங்குவதற்கான சீருடைகள், புத்தகங்கள் பள்ளி வளாகத்தில் உள்ள கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்தன.

நேற்று பகல், 2:00 மணிக்கு சீருடைகள், புத்தகங்கள் இருந்த கட்டடத்தில் தீ பற்றியதில், அதில் வைத்திருந்த அனைத்தும் எரிந்து நாசமாகி விட்டன.மணல்மேல்குடி தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். மணல்மேல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.10.7.22: புதுக்கோட்டை: மீனாட்சிசுந்தரம்: 9842653439 (படம் உண்டு)

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog