Breaking

Wednesday, April 20, 2022

6 முதல் 9ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு அறிவிப்பு

பொதுத்தேர்வு அறிவிப்பு

தமிழகத்தில், பள்ளிக்கல்வி பாட திட்டத்தில் படிக்கும், 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மாவட்ட அளவிலான பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை அறிவித்தபடி, பொதுத் தேர்வு அட்டவணை, மாவட்ட வாரியாக வெளியாகி உள்ளது.

சென்னை மாவட்ட பொதுத்தேர்வு அட்டவணையை, முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் வெளியிட்டுள்ளார்.அதன்படி, 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மே 5ல் தேர்வு துவங்க உள்ளது. பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடம்; மே 7ல் ஆங்கிலம்; மே 9ல் விருப்ப மொழி பாடம்; மே 10ல் கணிதம்; மே 11ல் அறிவியல் மற்றும் மே 12ல் சமூக அறிவியல் தேர்வுகள் நடக்கின்றன. மாணவர்கள் பிற்பகல் 1:30 மணிக்கு தேர்வறையில் தயாராக இருக்க வேண்டும்.

பிற்பகல் 1:45 மணிக்கு துவங்கும் தேர்வு, மாலை 4:30 மணிக்கு முடியும். இதில், 9ம் வகுப்புக்கு மட்டும், மாலை 5:00 மணிக்கு தேர்வு முடியும்.அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகள், சிறப்பு பள்ளிகள் என அனைத்துக்கும், மாவட்ட அளவில் பொதுவான வினாத்தாள் வழங்கப்படும் என்றும், பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog