Breaking

Friday, March 18, 2022

மார்ச் 27இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஆட்சியர் தகவல்

சூலூர் ஆர்.வி.எஸ். கலை, அறிவியல் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 27ஆம் தேதி (ஞாயிற்றுக்கி ழமை) நடைபெறவுள்ளது என்று ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித் துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட தொழில் மையம் மூலம் நடைபெறவுள்ள தனியார் வேலை வாய்ப்பு முகாமில் உற்பத்தி மற்றும் ஜவுளித் துறை, தகவல் தொழில் நுட்பத் துறை, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை,ஆட்டோ மொபைல், மருத்துவத் துறை, கல்வித் துறை, வங்கித் துறை, சேவைத் துறை உள்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த 170க்கும் மேற்பட்ட தனி யார் நிறுவனங்கள் பங்கேற்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டபணியிடங் களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் அனைவரும் பங்கேற்கலாம்.

இதையும் படிக்க | SMC ஆலோசனை கூட்ட கருத்து கேட்பு படிவம் - Download here

இந்த முகாமில் பங்கேற்கவுள்ள தனியார் நிறுவனங்கள், வேலைதே டும் நபர்கள் ஆகியோர் www.tnprivatejobstn.gov.in, www.ncsgov.in ஆகிய இணையதளங்களில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த வாய்ப்பினை இளைஞர்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog