Breaking

Friday, February 04, 2022

2022-ம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தள்ளிவைப்பு: ஒன்றிய அரசு தகவல்

மார்ச் 12-ம் தேதி 2022-ம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. இந்த தேர்வுகள் 6 முதல் 8 வாரங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 2021-ம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவ கலந்தாய்வு நடைபெற்று வருவதால் 2022-ம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு விளக்கமளித்துள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கும், எம்.டி., எம்.எஸ். போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

அந்தவகையில், 2022 கல்வியாண்டிற்கான மருத்துவ மேற்படிப்புக்கு NEET PG 2022 நீட் தேர்வுக்கு மார்ச் 12-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் 2021-ம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவ கலந்தாய்வு நடைபெற்று வருவதால் 2022-ம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படடுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog