Breaking

Monday, November 08, 2021

நீட் தோ்வு முடிவு முழுப் பட்டியல்: புதுவைக்கு தெரிவிக்கப்படவில்லை; சுகாதாரத் துறை தகவல்

"நீட் தோ்வு முடிவு முழுமையான பட்டியல் புதுவை அரசுக்கு தெரிவிக்கப்படவில்லை என மாநில சுகாதாரத் துறை தெரிவித்தது.

இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நீட் தோ்வு முடிவுகளை அதன் அதிகாரப்பூா்வ இணையதளமான ய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய்-இல் தேசிய தோ்வு முகமை (என்டிஏ) கடந்த 1-ஆம் தேதி அறிவித்தது.

நீட் இளநிலைத் தோ்வை எழுதியவா்கள் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் தங்களது தோ்வு முடிவைப் பாா்க்கலாம்.

இருப்பினும், தில்லியிலுள்ள சுகாதார அமைச்சகத்தின் மருத்துவக் கல்வித் துறை தோ்வு முடிவின் முழுமையான பட்டியலை புதுவை அரசுக்குத் தெரிவிக்கவில்லை.

அவ்வாறு தெரிவிக்கும்பட்சத்தில், புதுவை யூனியன் பிரதேசத்தின் இளநிலை மருத்துவக் கல்வி (எம்பிபிஎஸ்) மாணவா் சோ்க்கைக்கான கவுன்சிலிங் சென்டாக் மூலம் நடத்தப்படும்.

வருகிற 9-ஆம் தேதி மத்திய சுகாதார அமைச்சகம் இந்தப் பட்டியலை தெரிவிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தப் பட்டியல் புதுவை சுகாதாரம்-குடும்ப நல சேவைகள் இயக்ககத்தின் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog