'10, 11, 12-ம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் இல்லை' - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 12, 2021

Comments:0

'10, 11, 12-ம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் இல்லை' - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

"தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் கிடையாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நேரடியாக பொதுத்தேர்வுகள் நடைபெறும் எனவு அவர் தெரிவித்துள்ளார். "
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நேரடியாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் அனைத்து பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், திட்டமிட்டப்படி வரும் 1ஆம் தேதி முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார். 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு அரையாண்டு தேர்வுகள் நடத்துவதற்கு வாய்ப்பில்லை என்றும் நேரடியாக மார்ச் ஏப்ரல் மாதத்தில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று கூறினார்.

பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் டிசம்பர் மாதத்தில் பொதுவான ஒரு தேர்வு நடத்துவதற்கு நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். மாணவர்களின் கற்றல் குறைப்பாட்டை போக்குவதற்காக மக்கள் பள்ளி திட்டம் என்ற திட்டம் வரும் 18ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் தலைமை செயலாளர் பங்கேற்றுள்ள கூட்டம் நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews