Breaking

Monday, September 13, 2021

நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடத்தப்பட்டது. நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.


நீட் தேர்வு:


மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 12ம் வகுப்பில் பெறப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான சீட்டுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. நீட் தேர்வு குறித்து பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் இருந்து வரும் நிலையில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய கோரி பலர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இருப்பினும் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்று வந்த நிலையில் தமிழகத்தில் இருந்து 1.10 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதில் அரசு பள்ளி மாணவர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு நடத்தப்பட்ட நீட் நுழைவுத்தேர்வில் பெரும்பாலான கேள்விகள் மாநில அரசின் பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதில், இயற்பியல், விலங்கியல் பாட வினாக்களில் 95 சதவீத கேள்விகள் தமிழ்நாடு அரசின் பாடப்புத்தகங்களில் இருந்து கேட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


மேலும், தாவரவியல், வேதியியல் பாடங்களில் இருந்து 75 சதவீத வினாக்கள் மாநில அரசின் பாடப்புத்தகங்களில் இருந்து கேட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக 76 வினாக்கள் எளிமையாக இருந்ததாகவும், 62 வினாக்கள் சராசரியாக இருந்ததாகவும், 62 வினாக்கள் கடினமாக கேட்கப்பட்டிருந்ததாகவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாவரவியலில் 20 வினாக்கள் கடினம் என்றும், இயற்பியலில் 19 வினாக்கள் கடினமாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இயற்பியல் பாட வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்த நிலையில் பள்ளி கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog