Breaking

Monday, September 13, 2021

தமிழக அரசு சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு! - செப்.,30 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனம், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், பட்டப்படிப்பு படிக்கும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, மற்றும் சீர் மரபினர் மாணவ – மாணவியருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.


உதவித்தொகை:


தமிழகத்தில் மாணவர்களின் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து ஊனமுற்றவர்கள், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் என அனைவருக்கும் இலவச கல்வி வழங்கும் நோக்கில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனம், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், பட்டப்படிப்பு படிக்கும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, மற்றும் சீர் மரபிணர் மாணவ – மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனம், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், பட்டப்படிப்பு படிக்கும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, மற்றும் சீர் மரபிணர் மாணவ – மாணவியர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி உதவித்தொகை பெற்றுக்கொள்ளலாம். உதவித்தொகை பெற விரும்புபவர்கள் புதுப்பித்தல் செய்வோர், செப்.,30 க்குள், புதிய விண்ணப்பங்கள் நவ.,5க்குள் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


உதவித்தொகை பெறுவது குறித்த மேலும் விவரங்களுக்கு திருவள்ளூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் சென்று அணுகலாம் அல்லது www.tn.gov.in/bcmbcdept என்ற, அரசு இணையதளத்திலும் இது குறித்த விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்.ஆர்வமுள்ள மாணவர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் தங்கள் விண்ணப்பத்தை செல்லும்படி கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் கூறியுள்ளார். குறிப்பிட்ட தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொளளப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog