Breaking

Saturday, September 18, 2021

படிப்பை நிறுத்திய மாணவி: பள்ளியில் சேர்த்த போலீசார்

கூடலுார் சளிவயல் பழங்குடி கிராமத்தில், மகளிர் போலீசார் சார்பில் குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.


இன்ஸ்பெக்டர் சுசிலா தலைமை வகித்து பேசினார். அந்த கிராமத்தில் சந்தியா,14, என்ற மாணவி, 8ம் வகுப்பு முடித்து, படிக்க ஆர்வம் இருந்தும், பள்ளிக்கு செல்ல இயலாத சூழலில் இருப்பது தெரியவந்தது. அவரை பள்ளியில் சேர்த்து, படிப்பை தொடர உதவுவதாக, போலீசார் உறுதி அளித்தனர்.


அதன்படி, இன்ஸ்பெக்டர் சுசிலா, பெண் போலீசார் திவ்யா ஆகியோர், மாணவியை, கூடலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பில் சேர்ந்தனர். ஆசிரியர்கள் அவர் கல்வியை தொடர ஊக்கப்படுத்தினர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog