Breaking

Wednesday, September 22, 2021

ஒரே பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்களை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வழக்கு

பரமக்குடியைச் சேர்ந்த சுரேஷ்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் ஒரே பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.


ஆனால் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இளநிலை, முதுநிலையில் வெவ்வேறு பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் முதுநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். இதனால் மாணவர்களுக்கு திறம்பட கற்பிக்க இயலவில்லை. எனவே இளநிலை, முதுநிலையில் ஒரே பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்களை மட்டுமே முதுநிலை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்ற அரசாணையை தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலர், இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ.10-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog