Breaking

Monday, August 16, 2021

வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி அரசு ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் கோரிக்கை இன்றைய காலைகதிர் செய்தியில்

தி.மு.க.,வின் தேர்தல் வாக் குறுதிகளை நிறைவேற்றக்கோரி, அரசு ஊழியர்கள் சங்கத்தினர், இன்று. ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

தமிழக பட்ஜெட்டில், தங்கள் கோரிக்கைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று, அரசு ஊழி யர்கள் சங்கங்கள் எதிர்பார்த்தன. ஆனால், அகவிலைப்படி உயர்வு ஒன்பது மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளன.

இதுகுறித்து, தமிழ்நாடு பட் டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலர் ரைமண்ட்; பேட்ரிக் உடற்கல்வி ஆசி ரியர் மற்றும் உடற்கல்வி இயக் குனர் சங்க தலைவர் சங்கரபெ ருமாள்; அரசு பணியாளர் சங்கமாநில தலைவர் பி.குமார்; தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர் அன்பரசு, பொதுச்செ யலர் செல்வம்; அண்ணா பல்க லையின் ஆசிரியர் சங்க செயலர் சந்திரமோகன் ஆகியோர் கண் டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், தேர்தல் வாக் குறுதியை நிறைவேற்றக் கோரி, தமிழகம் முழுதும் இன்று, ஆயிரம் இடங்களில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog