Breaking

Wednesday, July 21, 2021

விரைவில் தமிழில் உயா்கல்வி பாடப் புத்தகங்கள்

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயா்கல்விக்கான தமிழ்ப் பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி விரைவில் தொடங்க இருப்பதாக தமிழ்நாடு பாட நூல் கழகத் தலைவா் ஐ.லியோனி தெரிவித்தாா்.

திருவள்ளூா் அருகே புங்கத்தூத்க் நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை செவ்வாய்க்கிழமை அவா் ஆய்வு செய்த பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தற்போது ஆங்கில வழியில் மருத்துவம், பொறியியல் படிக்கும் கிராமங்களைச் சோந்த மாணவா்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். இதைத் தவிா்க்கும் நோக்கில், தமிழ் வழியில் மருத்துவம், பொறியியல் பாடங்களை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதற்காக மருத்துவம், பொறியியல் பாடங்களை தமிழ் வழியில் அச்சிடும் பணி விரைவில் தொடங்க உள்ளது என்றாா். ஆய்வின்போது, எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog