Breaking

Tuesday, July 27, 2021

தமிழக அஞ்சல்துறை சார்பில் வாகனக் காப்பீடு திட்டம்

தமிழக அஞ்சல்துறை சார்பில் வாகனக் காப்பீடு திட்டம்
சென்னை,ஜூலை 26: தமிழக அஞ்சல்துறை சார்பில், வாகனக் காப்பீடு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு காப்பீடு வழங் கப்படுகிறது.

பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில், புதிய சேவைகளை இந்திய அஞ்சல்துறை அவ்வப்போது அறிமுகப்படுத்தி செயல் படுத்தி வருகிறது. குறிப்பாக, அரசு சான்றிதழ்களை வழங்குவ தற்காக அஞ்சலகங்களில் பொது சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, வாகனக் காப்பீடு வழங்கும் திட்டத் தைத் தொடங்கி உள்ளது. இதற்காக, பஜாஜ் அலையன்ஸ், டாடா ஏஐஜி ஜெனரல் இன்சூரன்ஸ் போன்ற நிறுவனங்களு டன் அஞ்சல்துறை ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, முதற்கட்டமாக இரண்டு மற்றும் நான்கு சக் கர வாகனங்களுக்கு காப்பீடு வழங்குகிறது. வாடிக்கையா ளர்கள் அஞ்சலகங்களில் நேரடியாகவும், இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி மூலமாகவும் வாகனத்துக்கு காப்பீடு பெற் றுக் கொள்ளலாம். மேலும், கூடுதல் ஆவணங்களின்றி விரை வாக காப்பீடு வழங்கப்படுகிறது என்று அஞ்சல்துறை அதிகாரி கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog