Breaking

Thursday, July 08, 2021

செப்டம்பர் 5-ல் நீட் நுழைவுத் தேர்வு என்பது தவறான தகவல் - தேசிய தேர்வு முகமை

நீட் தேர்வு குறித்து வெளியான தகவல் தவறானது என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. அதேபோல் தமிழக அரசும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்தது. இந்நிலையில் நீட் தேர்வு நடக்குமா நடக்காதா என்று நிலையற்ற சூழல் நிலவுவதால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.


இதனிடையே செப்டம்பர் 5ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெற இருப்பதாக தகவல் வெளியான நிலையில், நீட் தேர்வு குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. நீட் தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து வருவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog