Breaking

Saturday, May 22, 2021

தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க முதலமைச்சரிடம் மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை

மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க முதலமைச்சரிடம் மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்! ஊரடங்குக் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கவும் மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் தளர்வுகளே இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலனை!
ஊரடங்கு காலத்தில் தளர்வுகள் உள்ளதால் மக்கள் அதிகம் ஊர் சுற்றுகின்றனர்.
இது விடுமுறை காலமல்ல கொரோனா காலம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
கொரோனா லாக்டவுன் நாட்களில் விடுமுறை போல ஊர் சுற்றக்கூடாது.
மக்கள் விழிப்புணர்வோடு வீட்டிற்குள்ளேயே இருப்பது அவசியம்.
காவல்துறையினரின் அன்பான ஆலோசனையை கேட்க வேண்டும்.
ஜூன் முதல் வாரத்தில் கொரோனா உச்சத்தை அடையும்.
மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மேலும் மன அழுத்தத்தை தரக்கூடாது.
பள்ளிகள், கல்லூரிகளை இன்னும் எத்தனை நாட்கள் மூடி வைத்திருப்பது?
தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தலாமா?
சட்டமன்ற உறுப்பினர் குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog