CBSE பிளஸ் 2, பத்தாம் வகுப்பு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 26, 2021

Comments:0

CBSE பிளஸ் 2, பத்தாம் வகுப்பு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம்

புதிய கல்விக் கொள்கையின்படி சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத்திட்டத்தில் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எலக்ட்ரானிக் பணிபதிவேடு பணிகள் மே 10ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு
இதன் ஒரு பகுதியாக 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ஆண்டு இறுதித் தோ்வு மற்றும் பொதுத்தோ்வு வினாத்தாள்களில் புதிய மாற்றங்களை சிபிஎஸ்இ அறிமுகம் செய்துள்ளது. ஒன்பதாம் வகுப்பு ஆண்டு இறுதித் தோ்வு, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வினாத்தாள்களில் 30 சதவீதம் வரையிலும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு தோ்வுகளில் 20 சதவீதம் வரையிலும் திறன் மதிப்பீடு வினாக்கள் இடம்பெறும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
பெண் இசை ஆசிரியர் தேவை - ஊதியம்: அரசு நிர்ணயிக்கும் சம்பளம்
மேலும் அன்றாட வாழ்க்கை தொடா்பாக புதிய வகை திறன் மதிப்பீடு கேள்விகள் இருக்கும். அதே வேளையில் கொள்குறி வகை வினாக்களும் இடம் பெறும். இந்த புதிய மாற்றங்கள் வரும் கல்வியாண்டு ( 2021-2022 ) முதல் அமலுக்கு வரும் என சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews