Breaking

Sunday, April 25, 2021

நீங்கள் 18 வயது நிரம்பியவரா? கோ-வின் இணையதளத்தில் பதிவு செய்து கோவிட்-19 தடுப்பூசியை எளிதில் பெறுவது எப்படி?

கோ-வின் இணையதளத்தில் பதிவு செய்து கோவிட்-19 தடுப்பூசியை எளிதில் பெறுவது எப்படி என்பதை இங்கு காணலாம்.
1. கோ-வின் இணைய தளத்திற்குள் உள் நுழையவும் - cowin.gov.in
2. ஏப்ரல் 28, 2021 முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். 3. தடுப்பூசிக்கான முன் அனுமதியை அட்டவணைப்படுத்திக் கொள்ளுங்கள்.
4. 18 முதல் 45 வயதுடையோர் தங்களுக்கான தடுப்பூசியை தனியார் தடுப்பூசி மையங்களில் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.
5. பதிவு செய்வதற்கு பயன்படுத்திய அலைபேசி எண்ணிற்கு உங்களுக்கான பதிவு உறுதி செய்யப்பட்டது என்ற செய்தி அனுப்பப்படும்.
6. முன்பதிவுச் சீட்டு மற்றும் பதிவு செய்ய பயன்படுத்திய உங்களது புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டையை மறவாமல் தடுப்பூசி மையத்திற்கு எடுத்துச் செல்லுங்கள். 18 முதல் 45 வயதுடையோர் அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசிக்கான முன்பதிவு துவங்க உள்ளது.
• கோ-வின் இணைய தளத்தில் ஏப்ரல் 28, 2021 முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
• மே 1, 2021 முதல் தடுப்பூசி பெற்றுக் கொள்ள முன் அனுமதி வழங்கப்படும்.
• 18 முதல் 45 வயதுடையோர் தனியார் தடுப்பூசி மையங்களில் மட்டுமே தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும்.
உங்களுக்கான முன்பதிவை கோ-வின் இணைய தளத்தில் (https://www.cowin.in) முன்னதாகவே செய்திடுங்கள்.
கோ-வின் இணைய தளம் அல்லது ஆரோக்கிய சேது செயலியின் மூலமாக முன் பதிவு செய்த பின்னரே தடுப்பூசி பெற்றுக் கொள்ள முடியும்.
தடுப்பூசி மையங்களுக்கு நேரடியாகச் சென்று பதிவு செய்துகொள்ள முடியாது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog