தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ள நிலையில் நடப்பு கல்வியாண்டில் பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாணவர் சேர்க்கை: தமிழகம் முழுவதும் வழக்கமாக 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகளின் முடிவுகள் ஜூன் மாதத்தில் அறிவிக்கப்படும். அதன் பின்னர் பொறியியல், கலை மற்றும் அறிவியல் உயர் கல்வி நிறுவன சேர்க்கை ஜூலை முதல் தொடங்கும். 2020 ஆம் ஆண்டில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, 12 ஆம் வகுப்பு முடிவுகள் ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் அறிவிக்கப்பட்டன மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை ஆகஸ்டில் தொடங்கியது.
மேலும் கொரோனா தொற்றுநோய் நிலவரத்தை பொறுத்து, ஜூன் மாதத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இதை பள்ளிக் கல்வித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜூன் மாதத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டால், ஆகஸ்ட் மாதத்திற்குள் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை பெறுவர். இதனால் கல்லூரிகளில் சேர்க்கை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் மட்டுமே தொடங்கும். பொதுத்தேர்வுகள் நடைபெறுவதற்கு முன்னர் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு குறைந்தபட்சம் 15 நாட்கள் நேரடி வகுப்புகள் நடத்தப்பட வேண்டி உள்ளது.
எனவே விரைந்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்தி முடித்தால், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த எளிதாக இருக்கும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.