தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளிக்கு ISO தர சான்றிதழ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 02, 2021

Comments:0

தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளிக்கு ISO தர சான்றிதழ்

தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரை மாவட்டம் நிலையூர் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளி iso தர சான்றிதழ் பெற்றுள்ளது. திருப்பரங்குன்றம் அருகே நிலையரில் உள்ளது இந்த அரசு உயர்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் விநாயகமூர்த்தி என்பவர் பள்ளியின் மேம்பாடு மற்றும் மாணவர்களின் கல்வித்திறனை அதிகரிக்கும் வகையில் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார். அரசு கல்வி நிறுவனங்களில் அனைத்து ஆவணங்களையும் தமிழ் மொழியில் மட்டுமே கையாள உயர்கல்வித் துறை உத்தரவு
இதன் அடிப்படையில் நிலையூர் உயர்நிலைப் பள்ளிக்கு தர மேலாண்மைக்கான iso 9001-2015 தர சான்றிதழ் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தலைமை ஆசிரியர் கூறியபோது அவரது மகனும் அதே பள்ளியில் 6-ம் வகுப்பு பயின்று வருவதாக தெரிவித்தார். மேலும் சட்டமன்ற உறுப்பினரிடம் கேட்டு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டதாக அவர் கூறினார். மாணவர்களுக்காக 40 மேஜை, மற்றும் இருக்கைகள் புதிதாக வாங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். பள்ளி வளாகத்தில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் தொடர்புகொள்ள இண்டர்காம் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் முழுநேரமாக பள்ளிகள் இயங்கும் - புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
வகுப்பறையில் பொருத்தப்பட்டுள்ள தகவல் பலகையில் தினமும் புதுப்புது தகவல்கள் இடம் பெறுகின்றன. இது மட்டுமின்றி மாணவர்களுக்கு புதுமையான வழிகளில் ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். நிலையூர் அரசு பள்ளியின் தரம் மேம்பட ஆசிரியர்களும், தலைமை ஆசிரியரும் நாளுக்கு நாள் புதுப்புது முயற்சியை மேற்கொண்டு வருவது மகிழ்ச்சியை அளிப்பதாக மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews