Breaking

Wednesday, March 17, 2021

இடஒதுக்கீடு வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு கெடு

இடஒதுக்கீடு தொடர்பான, 1992 தீர்ப்பை மறுஆய்வு செய்வது தொடர்பான வழக்கில், ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு நிர்ணயித்து உள்ளது. தமிழகத்தில், 69 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படுவதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
(17.03.2021) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தல் - சார்பு - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் உத்தரவு
இந்நிலையில், மஹாராஷ்டிராவில், மராத்தா இன மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, உச்ச நீதிமன்றம், 1992ல் அளித்த தீர்ப்புக்கு எதிராக, 50 சதவீதத்துக்கும் அதிகமாக இடஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கை, நீதிபதிகள், அசோக் பூஷண் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது.
தேர்தல் பணி - தடுப்பூசி போடும் ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு!
இந்த வழக்கு, நாட்டின் பல மாநிலங்களுக்கும் பொருந்தும் என்பதால், அனைத்து மாநிலங்களும் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.மேலும், 1992ல் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டுமா அல்லது 50 சதவீத இடஒதுக்கீட்டு முறையை தொடரலாமா என்பது குறித்தும் பதிலளிக்க, அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிடப்பட்டது. அவகாசம்
(17.03.2021) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தல் - சார்பு - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
இந்நிலையில், &'சட்டசபை தேர்தல் நடப்பதால், தற்போதைக்கு பதில் மனு தாக்கல் செய்ய இயலாது&' என, தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்து, அமர்வு கூறியதாவது:இந்த வழக்கின் விசாரணை, 22ம் தேதி முதல் தினமும் நடக்கும். சட்டசபை தேர்தல் நடப்பதால், அவகாசம் அளிக்க முடியாது. ஒரு வாரத்துக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, அமர்வு கூறியுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog