கால்நடைத்துறையில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 17, 2021

Comments:0

கால்நடைத்துறையில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்!

கால்நடைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று கால்நடைத்துறை அமைச்சர் பிரபு சவுஹான் தெரிவித்தார். குடகு மாவட்டத்தில் கால்நடைத்துறை அமைச்சர் பிரபுசவுஹான் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மாவட்டத்தில் பல இடங்களில் ஆடு, மாடுகளை மேய்க்க மேய்ச்சல் நிலம் இல்லாமல் உள்ளது. அதேபோல், சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை மீட்க நடவடிக்கை எடுக்கப் படும். மாநிலத்தில் பசுவதை தடை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது.

அரசு ஊழியர்களின் சம்பளம், PF தொகையில் மாற்றம் – புதிய ஊதிய கொள்கை விரைவில் அமல்!

விவசாயிகள் ஆடு, மாடுகளை அதிகமாக வளர்க்க வேண்டும். பசுக்களை இறைச்சிக்கு விற்பனை செய்யாமல் பால் விற்பனை செய்து வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான உதவியை அரசு செய்யும். இது தொடர்பாக அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பசுவதை தடை சட்டம் அமலில் உள்ளதால் காவல் துறையினர் பசுவதைகளை கண்காணித்து வருகின்றனர். கால்நடைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும். குடிநீர் திட்ட பணிகள் விரைவில் முடிக்கப்படும் -அமைச்சர் பைரதி பசவராஜ் குடகு மாவட்டம் மடிக்கேரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமைச்சர் பைரதி பசவராஜ் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் மடிக்கேரி, குந்தா மேஸ்திரி குடிநீர் திட்ட பணிகளை பார்வையிட்டார்.

தமிழக இடைக்கால பட்ஜெட் – பிப்ரவரி 23ம் தேதி தாக்கல்!

பின்னர் அவர் கூறுகையில், குடகு மாவட்டம் மழையால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீருக்காக கால்வாய், சேமடைந்துள்ள சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குடிநீர் தண்ணீர் பிர்சனை தீர்க்க அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வழங்க மத்திய அரசு திட்டத்துடன் மாநில அரசு இணைந்து குடிநீர் வினியோகம் செய்யப்படும். மடிக்கேரியில் குடிநீர் திட்ட பணிகள் 3 மாதங்களுக்குள் பணிகள் முடிந்து விடும் என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews