Breaking

Monday, February 15, 2021

ஐந்து ஐ.ஐ.டி.,களில், முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கையில் சமூக அநீதி!

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:சென்னை ஐ.ஐ.டி., உள்ளிட்ட, இந்தியாவின் புகழ் பெற்ற, ஐந்து ஐ.ஐ.டி.,களில், முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்ட, இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மிகப்பெரிய சமூக அநீதி இழைக்கப்பட்டுள்ளது

கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் தொடக்கம் .இட ஒதுக்கீடு பிரிவினரை புறக்கணித்துவிட்டு, பொதுப் பிரிவினரைக் கொண்டு, ௭௨.௧௦ சதவீத இடங்கள் நிரப்பப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. நாடு முழுதும் உள்ள, ௨௩ ஐ.ஐ.டி.,களில், இட ஒதுக்கீடு நடைமுறை வந்த காலம் முதல், இப்போது வரை, ஒட்டு மொத்தமாக வழங்க வேண்டிய, ௪௯.௫௦ சதவீத இட ஒதுக்கீட்டுக்குப் பதிலாக, வெறும், ௧௨ சதவீதம் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது.

எம்.டெக்., படிப்பு விவகாரம் - அரசு உறுதி செய்ய கோரிக்கை

பொதுத் தேர்வாணையத்தை அமைக்க வேண்டும். பேராசிரியர்கள் நியமனம், முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சேர்க்கை குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட ஐ.ஐ.டி., நிர்வாகங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog