Breaking

Saturday, February 13, 2021

கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் தொடக்கம்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை பகுதியில் உள்ள வட்டாச்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்களை வழங்கலாம் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார். கிராம உதவியாளர் பணி:
ஒரு கிராமத்தில் உள்ள மொத்த பிறப்பு, இறப்பு கணக்குகளை பதிவு செய்து அவற்றை முறையாக பராமரித்து வைப்பது, கிராமத்தின் கணக்குகளை பராமரிப்பது, கிராமத்தின் வருவாய் நிர்வாகம் போன்ற அனைத்து முக்கிய பணிகளையும் நிர்வகிப்பது கிராம நிர்வாக அலுவலரின் பணியாகும். காலியிடங்கள்:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வட்டாட்சியர் குமார் அவர்கள் பணிக்கான விண்ணப்பங்களை விண்ணப்பதாரர்களிடம் இருந்து பெற்றார். மொத்தம் கிராம உதவியாளர் பணிக்கு 28 காலியிடங்கள் உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர்:
இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அவர்கள், கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்களை இன்று முதல் வழங்கலாம். விண்ணப்பதாரர்கள் அவர்கள் இருக்கும் தாலுகாவில் உள்ள வட்டாச்சியர் அலுவலகத்தில் விண்ணப்பத்தை வழங்கலாம். மேலும், விண்ணப்பங்கள் முத்திரையிடப்பட்ட அட்டைப்பெட்டியில் விண்ணப்பத்தை பெற்று பத்திரப்படுத்தினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog