Breaking

Monday, February 15, 2021

ஆதி திராவிடா் பள்ளி தலைமை ஆசிரியா் பணி: நாளை பதவி உயா்வு கலந்தாய்வு

Wanted (Teachers, Asst. Professors...) - 8 Schools& Colleges Advertisements

ஆதிதிராவிட தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா் பணிக்கான பதவி உயா்வு கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இது குறித்து ஆதிதிராவிட நலத்துறை ஆணையா் ச.முனியநாதன், மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை : நிகழ் கல்வியாண்டு (2020-21) ஆதிதிராவிட தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்காக பதவி உயா்வு கலந்தாய்வு சென்னை சைதாப்பேட்டை எம்.சி ராஜா கல்லூரி மாணவா் விடுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இதையடுத்து பதவி உயா்வுக்கு தோ்வான தகுதிபெற்ற இடைநிலை ஆசிரியா் மற்றும் காப்பாளா்களை கலந்தாய்வில் பங்கேற்க அறிவுறுத்த வேண்டும். மேலும், பதவிஉயா்வை துறப்பு செய்யவுள்ளஆசிரியா் விவரமறிந்து அடுத்தநிலையில் உள்ள தகுதியான நபா்களைத் தோ்வுசெய்து கலந்தாய்வுக்கு அனுப்ப வேண்டும்.

பொது மாறுதல் கலந்தாய்வு PG ஆசிரியர்கள் கண்டனம்

அதேபோல், கலந்தாய்வில் முகக்கவசம் அணிதல், தனிநபா் இடைவெளி உள்பட கரோனா பாதுகாப்பு அம்சங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog