Breaking

Sunday, February 14, 2021

பொது மாறுதல் கலந்தாய்வு PG ஆசிரியர்கள் கண்டனம்

“தமிழகத்தில் வழக்கத்திற்கு மாறாக முதுகலை ஆசிரியர்களுக்கு முன்னதாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்துவது கண்டிக்கத்தக்கது” என தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் சுரேஷ் தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது:

தொடக்கப்பள்ளி - பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயாரிப்பது தொடர்பான தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்

பி.ஜி., ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவிஉயர்வு வழங்காமல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாறுதல் மற்றும் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு துவங்கியுள்ளது வழக்கத்திற்கு மாறானது.இதனால் மாறுதலுக்காக காத்திருக்கும் பி.ஜி., ஆசிரியர்கள் பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியர்களால் நிரப்பப்பட்டுவிடும். இது கண்டிக்கத்தக்கது. எனவே வழக்கம் போல் பி.ஜி., ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் உள், வெளி மாவட்ட மாறுதல் கலந்தாய்வை முன்கூட்டியே நடத்த கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப் படுமா? - தி.மு க தலைவர் பதில்

மேலும் 2019 ல் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின் போராட்ட காலத்தை பணிக்காலமாக கருதி அதற்கான பணப் பலன் மற்றும் நிறுத்தி வைக்கப்பட்ட பதவி உயர்வுகளை வழங்க அரசு முன்வரவேண்டும் என்றார். மாவட்ட செயலாளர் சந்திரன் உடன் இருந்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog