சிறப்பாக செயல்பட்ட அரசு உயர் பள்ளிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் ரூ.50 ஆயிரம் வழங்கல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 03, 2020

Comments:0

சிறப்பாக செயல்பட்ட அரசு உயர் பள்ளிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் ரூ.50 ஆயிரம் வழங்கல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருவள்ளூர் மாவட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சிறப்பாக செயல்பட்ட 5 பள்ளிகளைத் தேர்வு செய்து இதற்கான சிறப்புத் தொகை ரூ.50 ஆயிரம் மற்றும் தகுதியுரை சான்றிதழ் ஆகியவைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழங்கினார்.
ஒவ்வொரு ஆண்டுதோறும் அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் மாணவர்களை ஒழுக்கத்துடன் கல்வி கற்பிப்பதோடு நன்றாக வழிநடத்துவதில் பெற்றோர்-ஆசிரியர் கழகம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இதுபோன்று மாநில அளவில் ஒவ்வொரு மாவட்டந்தோறும் சிறப்பாகச் செயல்படும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என தலா 5 பள்ளிகள் தேர்வு செய்து பள்ளிக் கல்வித்துறையின் பெற்றோர் ஆசிரியர் சங்க பிரிவு சார்பில் சிறப்புத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி வருகிறது. அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் பெற்றோர்கள் ஆசிரியர் சங்கம் சிறப்பாக செயல்படும் பொன்னேரி கல்வி மாவட்டம் பண்டிக்காவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, திருவள்ளூர் கல்வி மாவட்டம், மேல்நல்லாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி, ஆவடி கல்வி மாவட்டம், செம்பரம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி, திருத்தணி கல்வி மாவட்டம், திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அம்பத்தூர் கல்வி மாவட்டம், மேலப்பேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய 5 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பள்ளிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் சிறப்பு நிதி ரூ.50 ஆயிரம், தகுதியுரை சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். இதில் திருவள்ளூர் அருகே மேல் நல்லாத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர் நிலைப்பள்ளியும் ஒன்றாகும். திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் சிறப்பு தொகை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி தலைமை வகித்து சிறப்பாகச் செயல்படும் பள்ளியின் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கந்தசாமியிடம் ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை, தகுதியுரை சான்றுகளையும் வழங்கினார். இதேபோல், மற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும் வழங்கினார். இந்த தொகையை மராமத்து பணிகள் மற்றும் பள்ளி அடிப்படை வசதியை ஏற்படுத்தும் வகையில் செலவு செய்யப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சியில் நேர்முக உதவியாளர்கள் திருவரசு(மேல்நிலைப்பள்ளி), மலர்கொடி(உயர்நிலைப்பள்ளி), பெற்றோர் ஆசிரியர் பிரிவு அதிகாரி சீனிவாசன், உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெற்றோர் ஆசிரியர் சங்கம் சிறப்பாகச் செயல்படும் பள்ளியாகத் தேர்வு செய்யப்பட்ட பள்ளியாகத் தேர்வு செய்யப்பட்ட மேல்நல்லாத்தூர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கந்தசாமியிடம்,ரூ.50 ஆயிரம் காசோலை, தகுதியுரை சான்றிதழை வழங்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, உடன் நேர் முக உதவியாளர் திருவரசு மற்றும் மலர் கொடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews